search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருப்புக்கோட்டை அருகே லாரியை வழிமறித்து டிரைவர்களிடம் பணம் பறிப்பு- 2 பேர் கைது
    X

    அருப்புக்கோட்டை அருகே லாரியை வழிமறித்து டிரைவர்களிடம் பணம் பறிப்பு- 2 பேர் கைது

    லாரியை வழிமறித்து போலீஸ் எனக்கூறி டிரைவர்களிடம் 2 பேர் பணம் பறித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை 4 வழிச்சாலையில் உள்ளது கல்குறிச்சி. இங்கு நேற்று இரவு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அதனை சேலம் மாவட்டம் ஆத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்த கோபால் (வயது 32) ஓட்டி வந்தார்.

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் இருந்து சிமெண்டு பாரம் ஏற்றிக் கொண்டு அந்த லாரி சென்றது. கல்குறிச்சி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் லாரியை வழிமறித்தனர்.

    அவர்கள் தங்களை போலீஸ் எனக்கூறி டிரைவர் கோபாலிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ. 450-ஐ பறித்தனர். மேலும் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த 2 பேரும் மற்றொரு டிரைவரான சதீஷ் என்பவரிடம் இருந்த ரூ. 2 ஆயிரத்து 200-ஐயும் பறித்தனர்.

    அதன்பிறகு அவர்கள் சென்றுவிட்ட நிலையில் கோபால் மற்றும் சதீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் நெடுஞ்சாலை ரோந்து பாதுகாப்பு போலீசார் அங்கு வந்தனர்.

    அவர்களிடம் நடந்த சம்பவங்களை லாரி டிரைவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.

    போலீசாரின் அதிரடி சோதனையில் லாரி டிரைவர்களிடம் பணம் பறித்த 2 பேரும் சிக்கினர். அவர்களை அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரித்தபோது போலீஸ் என்ற பெயரில் பணம் பறித்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்களது பெயர் கருப்பசாமி (வயது 31), பன்னீர் செல்வம் (40) என்பதும் காரியாபட்டி அருகே உள்ள கணக்கநேந்தலை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. இவர்கள் இதுபோல மேலும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு இருக்கலாமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×