search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தி பிரசார் சபாவில் காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X

    இந்தி பிரசார் சபாவில் காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    நூற்றாண்டு கண்ட சென்னை தக்‌ஷிண பாரத் இந்தி பிரசார் சபாவில் நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். #RamNathKovind #MahatmaGandhiStatue
    சென்னை:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒருநாள் பயணமாக தமிழகத்துக்கு இன்று வருகை தந்துள்ளார். இன்று காலை சென்னைக்கு வந்த ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர். 



    அதன்பின்னர், சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் இந்தி பிரசார் சபாவுக்கு சென்றார் ராம்நாத் கோவிந்த். நூற்றாண்டு கண்ட சென்னை தக்‌ஷிண பாரத் இந்தி பிரசார் சபாவில் நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    எனக்கு பிடித்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டுக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி. தமிழ்நாடு மிக அழகிய மொழி, செம்மையான கலாச்சாரம், திறமையுடன் கடுமையாக உழைக்கும் மக்கள், தொன்மையான வரலாறு ஆகிய சிறப்புகளை கொண்டது. காந்திஜியின் கருத்துக்கள் உலகுக்கு பொதுவானவை என குறிப்பிட்டுள்ளார். #RamNathKovind #MahatmaGandhiStatue
    Next Story
    ×