search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    வேலூரில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    வேலூர் ரங்காபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயில் முன்பு அரசு போக்குவரத்து சங்க ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் ரங்காபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயில் முன்பு அரசு போக்குவரத்து சங்க ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு பொருளாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கேசவன் முன்னிலை வகித்தார். சம்மேளன பொருளாளர் தயானந்தன், தலைவர் காசி, பொதுச் செயலாளர் பரசுராமன், துணை பொதுச் செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். நிலுவையில் உள்ள பஞ்சபடி, விடுப்பு சம்பளம், உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க வேண்டும். பணியில் இருந்து ஓய்வு பெரும் அன்றைய நாளிலேயே பண பலன்களை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.
    Next Story
    ×