search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரக்கோணம் மைனர் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது
    X

    அரக்கோணம் மைனர் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது

    அரக்கோணம் அருகே 17 வயது பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    தக்கோலம்:

    அரக்கோணம் அடுத்த மேல் பாக்கத்தை சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண். அதே கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (எ) ராஜ் (22).

    இவர் கடந்த மாதம் மைனர் பெண்ணை கடத்தி சென்று காஞ்சிபுரத்தில் வைத்து ரகசியமாக தாலி கட்டி பாலியல் பலத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து மைனர் பெண்ணின் தாய் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு இளம் பெண்ணை போலீசார் மீட்டனர்.

    இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அரக்கோணம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் ராணிப்பேட்டை மகளிர் காப்பகத்தில் தங்க வைத்தனர். தலைமறைவாக இருந்த பால்ராஜை தேடி வந்தனர். நேற்று மாலை அரக்கோணம் போலீசார் பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த பால்ராஜை கைது செய்தனர். பின்னர் மைனர் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பால்ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து அரக்கோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரக்கோணம் கிளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×