search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்டையார்பேட்டையில்  மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது
    X

    தண்டையார்பேட்டையில் மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது

    தண்டையார்பேட்டையில் மதுபாட்டிலை கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மது கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
    ராயபுரம்:

    தண்டையார்பேட்டையில் வீராகுட்டி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருவோரம் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மது விற்பனை நடப்பதாக போலீசுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    டாஸ்மாக் கடைகளில் மது விற்கும் நேரத்தை காட்டிலும் இங்கு இரவு பகலாக மதுபாட்டில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.

    அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி இத்தகைய செயலில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர். காசிமேடு போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஆட்டோ ஒன்று வேகமாக சென்றது.

    தண்டவராயன் தெருவில் ஆட்டோவை போலீசார் மடக்கினர். ஆனால் ஆட்டோ நிற்காமல் சென்றதால் விரட்டி பிடித்து மடக்கினர். அதில் 150 மதுபாட்டில்கள் இருந்தன.

    டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கி சென்று கள்ள மார்க்கெட்டில் விற்க கொண்டு சென்ற தியாகு, ராபின் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மது கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×