என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தண்டையார்பேட்டையில் மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்19 Feb 2019 10:09 AM GMT (Updated: 19 Feb 2019 10:09 AM GMT)
தண்டையார்பேட்டையில் மதுபாட்டிலை கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மது கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
ராயபுரம்:
தண்டையார்பேட்டையில் வீராகுட்டி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருவோரம் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மது விற்பனை நடப்பதாக போலீசுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
டாஸ்மாக் கடைகளில் மது விற்கும் நேரத்தை காட்டிலும் இங்கு இரவு பகலாக மதுபாட்டில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.
அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி இத்தகைய செயலில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர். காசிமேடு போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஆட்டோ ஒன்று வேகமாக சென்றது.
தண்டவராயன் தெருவில் ஆட்டோவை போலீசார் மடக்கினர். ஆனால் ஆட்டோ நிற்காமல் சென்றதால் விரட்டி பிடித்து மடக்கினர். அதில் 150 மதுபாட்டில்கள் இருந்தன.
டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கி சென்று கள்ள மார்க்கெட்டில் விற்க கொண்டு சென்ற தியாகு, ராபின் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மது கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
தண்டையார்பேட்டையில் வீராகுட்டி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருவோரம் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மது விற்பனை நடப்பதாக போலீசுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
டாஸ்மாக் கடைகளில் மது விற்கும் நேரத்தை காட்டிலும் இங்கு இரவு பகலாக மதுபாட்டில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.
அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி இத்தகைய செயலில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர். காசிமேடு போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஆட்டோ ஒன்று வேகமாக சென்றது.
தண்டவராயன் தெருவில் ஆட்டோவை போலீசார் மடக்கினர். ஆனால் ஆட்டோ நிற்காமல் சென்றதால் விரட்டி பிடித்து மடக்கினர். அதில் 150 மதுபாட்டில்கள் இருந்தன.
டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கி சென்று கள்ள மார்க்கெட்டில் விற்க கொண்டு சென்ற தியாகு, ராபின் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மது கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X