search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத் தேர்தல்: அதிமுக-பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து
    X

    பாராளுமன்றத் தேர்தல்: அதிமுக-பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து

    பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக அதிமுக, பாமக கட்சிகளிடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. #LSPolls #ADMK #PMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில் அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் சேருவது உறுதி ஆனது.



    இதில் முதல்கட்டமாக அதிமுக-பாமக இடையே இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை நந்தனம் அருகே உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று காலை கூட்டணி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாமக தலைவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்களும் பங்கேற்றனர்.  சிறிது நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த நிலையில் தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் இன்று மதியம் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மந்திரி பியூஸ் கோயலும் மதியம் 12.15 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வருகிறார். அவர்கள் இருவரும் நட்சத்திர ஓட்டலில் அ.தி.மு.க. தலைவர்களை சந்தித்து கூட்டணி உடன்பாட்டை உறுதி செய்ய உள்ளனர். #LSPolls #ADMK #PMK
    Next Story
    ×