search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரியில் சூதாடிய 13 பேர் கைது - ரூ.31 ஆயிரம் பறிமுதல்
    X

    கிருஷ்ணகிரியில் சூதாடிய 13 பேர் கைது - ரூ.31 ஆயிரம் பறிமுதல்

    கிருஷ்ணகிரியில் பணம் வைத்து சூதாடியது தொடர்பாக 13 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.31 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமார், பேபி, ராமநாதன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தியேட்டர் அருகே, காந்திரோடு பகுதியில் சிலர், பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    அவர்களை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர்கள் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த வாசு (வயது 52), கிருஷ்ணமூர்த்தி(54), வெங்கடேஷ் (30), வேலு (57), கங்காதரன்(57), அலிஜான்(58), சுந்தரம்(55) உள்ளிட்ட 13 பேர் என்பதும், பணம் வைத்து சூதாடியதும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 13 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 31 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×