என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூரில் திருமணமான 11 மாதத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்18 Feb 2019 5:46 PM GMT (Updated: 18 Feb 2019 5:46 PM GMT)
கடலூரில் திருமணமான 11 மாதத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
கடலூர் புதுப்பாளையம் ஆர்.சி.நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 35). டிரைவர். இவருடைய மனைவி கார்த்தினி (31). இவர்களுக்கு திருமணமாகி 11 மாதங்கள் ஆகிறது. தற்போது கார்த்தினி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
ஏற்கனவே சற்று மனநிலை பாதிக்கப்பட்ட ரவிக்குமாரை நேற்று முன்தினம் கார்த்தினி வன்னியர்பாளையத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் விட்டு, விட்டு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-7 தேர்வு எழுத சென்று விட்டார். தொண்டு நிறுவனத்தில் உள்ள ஒரு அறையில் இருந்த ரவிக்குமார் திடீரென மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார்.
இதை அறிந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றி கார்த்தினி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த ரவிக்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் புதுப்பாளையம் ஆர்.சி.நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 35). டிரைவர். இவருடைய மனைவி கார்த்தினி (31). இவர்களுக்கு திருமணமாகி 11 மாதங்கள் ஆகிறது. தற்போது கார்த்தினி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
ஏற்கனவே சற்று மனநிலை பாதிக்கப்பட்ட ரவிக்குமாரை நேற்று முன்தினம் கார்த்தினி வன்னியர்பாளையத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் விட்டு, விட்டு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-7 தேர்வு எழுத சென்று விட்டார். தொண்டு நிறுவனத்தில் உள்ள ஒரு அறையில் இருந்த ரவிக்குமார் திடீரென மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார்.
இதை அறிந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றி கார்த்தினி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த ரவிக்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X