என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓரிரு நாட்களில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
Byமாலை மலர்18 Feb 2019 5:14 PM GMT (Updated: 18 Feb 2019 5:14 PM GMT)
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. முடிவை அறிவிக்கும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #opanneerselvam #admk #parliamentelection
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பாரதீய ஜனதா கூட்டணி அமைப்பது பற்றி முடிவு செய்வதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நாளை காலை 10 மணியில் இருந்து 11 மணிக்குள் மும்பையில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதனால் இந்த இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி நாளை இறுதி செய்யப்படும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. முடிவை அறிவிக்கும் என துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று கூறினார். அனைவரது எண்ணங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் கூட்டணி இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். #opanneerselvam #admk #parliamentelection
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X