என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல் - ஓட்டல் ஊழியர் பலி
Byமாலை மலர்17 Feb 2019 6:20 PM GMT (Updated: 17 Feb 2019 6:20 PM GMT)
நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார். அவரது உறவுக்கார பெண் படுகாயமடைந்தார்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள ஆண்டியூர் வடக்கு தெருவை சேர்ந்த மாரி மகன் சிவானந்தம் (வயது 24). இவர் கேட்டரிங் படித்து விட்டு சென்னையில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று தனது உறவுக்கார பெண் சுகந்தி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆண்டியூரில் இருந்து ஆண்டிப்பந்தல் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆண்டிப்பந்தல் ஆற்றுபாலம் அருகில் நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் இவர்கள் சென்ற போது மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த சிவானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த சுகந்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நன்னிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள ஆண்டியூர் வடக்கு தெருவை சேர்ந்த மாரி மகன் சிவானந்தம் (வயது 24). இவர் கேட்டரிங் படித்து விட்டு சென்னையில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று தனது உறவுக்கார பெண் சுகந்தி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆண்டியூரில் இருந்து ஆண்டிப்பந்தல் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆண்டிப்பந்தல் ஆற்றுபாலம் அருகில் நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் இவர்கள் சென்ற போது மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த சிவானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த சுகந்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நன்னிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X