என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா மரணத்திற்கு திமுக தான் காரணம் - தம்பிதுரை
Byமாலை மலர்17 Feb 2019 4:13 AM GMT (Updated: 17 Feb 2019 4:13 AM GMT)
ஜெயலலிதா இறப்புக்கு காரணமான தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். #Jayalalithaa #ThambiDurai #DMK
கரூர்:
கரூர் அருகே உள்ள சணப்பிரட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு கீதா மணிவண்ணன். எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு இருக்கிறது. கரூர் தொகுதியில் தான் எம்.பி.யாக இருக்கிறேன். எனவே மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிடவே விருப்ப மனு கொடுத்துள்ளேன். அதிக எம்.பி.க்களை கொண்ட கட்சி தான் நாட்டின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும். அந்த சூழல் தி.மு.க.வுக்கு இல்லை.
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தமிழகத்தில் ஒரு இடத்திலும் வெல்ல முடியாது. மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான் சுற்றுப்பயணம் செய்கிறாரே தவிர, பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அல்ல. யார் இந்த நாட்டின் பிரதமர் என சொல்லும் அளவுக்கு தி.மு.க. இருப்பதாக தெரியவில்லை.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட காரணமே தி.மு.க. தான். அவர்கள் தொடர்ந்த வழக்கினால்தான் மனஉளைச்சலுக்கு ஆளாகி உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஜெயலலிதா இறப்புக்கு காரணமான தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #ThambiDurai #DMK
கரூர் அருகே உள்ள சணப்பிரட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு கீதா மணிவண்ணன். எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு இருக்கிறது. கரூர் தொகுதியில் தான் எம்.பி.யாக இருக்கிறேன். எனவே மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிடவே விருப்ப மனு கொடுத்துள்ளேன். அதிக எம்.பி.க்களை கொண்ட கட்சி தான் நாட்டின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும். அந்த சூழல் தி.மு.க.வுக்கு இல்லை.
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தமிழகத்தில் ஒரு இடத்திலும் வெல்ல முடியாது. மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான் சுற்றுப்பயணம் செய்கிறாரே தவிர, பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அல்ல. யார் இந்த நாட்டின் பிரதமர் என சொல்லும் அளவுக்கு தி.மு.க. இருப்பதாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #ThambiDurai #DMK
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X