search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில் 61½ கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    X

    நீலகிரி மாவட்டத்தில் 61½ கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 61½ கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய மொத்தம் 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் சோதனை நடத்தப்பட்டது.

    இதற்காக ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி மண்டலங்களில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து சோதனை செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 61½ கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அபராத தொகையாக ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. எனவே வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 
    Next Story
    ×