search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தான்குளத்தில் இளம்பெண் மாயம்
    X

    சாத்தான்குளத்தில் இளம்பெண் மாயம்

    சாத்தான்குளத்தில் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவையை சேர்ந்தவர் சந்திரகுமார். இவரது மகள் ஆனந்தி (வயது 19). இவர் திசையன்விளையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக தினமும் அவர் பஸ்சில் சென்று வந்தார்.

    இந்நிலையில் கடந்த 10-ந் தேதி வேலைக்கு சென்ற ஆனந்தி பின்னர் வீடு திரும்பவில்லை. கடையிலும் இல்லை. உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை சந்திரகுமார் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார்.

    இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ஆனந்தி எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா என தேடி வருகின்றனர்.

    Next Story
    ×