என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சென்னிமலை அருகே விபத்து - கல்லூரி மாணவர் பலி
சென்னிமலை:
சென்னிமலை காங்கயம் மெயின் ரோட்டில் சிமென்ட் பாரம் ஏற்றி வந்த லாரியில் இரு சக்கர வாகனத்தில் மோதிய கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரளா மாநிலம், ஆழப்புழா, சேர்தலா பகவதிபரம்பல் ஊரை சார்ந்தவர் ஹாஜி இவரது மகன் ஆனந்த் வயது (21), பெருந்துறை அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக் பிரிவில் இறுதியாண்டு படித்து வந்தார்.
இன்றும் நாளையும் கல்லூரி விடுமுறை என்பதால் 4 இரு சக்கர வாகனங்களில் 8 மாணவர்கள் கொடைக்கானல் சுற்றுலாவிற்காக சென்று கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை சென்னிமலை பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.ஒரு வாகனத்தில் ஆனந்த் ஹெல்மெட் அணிந்து ஓட்டி வந்தார். அப்போது சிமெண்ட் பாரம் ஏற்றிய லாரி காங்கயம் நோக்கி சென்று கொண்டிருந்தது.தெற்கு ராஜ வீதி வளைவில் வந்து மெயின் சாலையில் திரும்பும்போது ஆனந்த் தடுமாறி லாரியின் சக்கரத்தில் மோதி கீழே விழுந்தார்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். வரும் வழியில் பரிதாபமாக ஆனந்த் உயிரிழந்தார்.
இன்னும் கல்லூரி படிப்பு முடிக்க சில மாதங்களே உள்ள நிலையில் விபத்தில் மாணவர் பலியானது கல்லூரி மாவணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்