search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரணியல் அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயம்
    X

    இரணியல் அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயம்

    இரணியல் அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    ராஜாக்கமங்கலம் முருங்கவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 34). இவரது மனைவி ரம்யா (26). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி இரணியலை அடுத்த பட்டன்விளை பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கிருந்த அவர் திடீரென்று 2 குழந்தைகளுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ரம்யா மற்றும் அவரது குழந்தைகளை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் எங்கும் இல்லை.

    இதையடுத்து இரணியல் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பொன்தேவி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான ரம்யா மற்றும் அவரது குழந்தைகளை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×