search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேல்மருவத்தூர் அருகே விபத்து - டீக்கடைக்காரர் பலி
    X

    மேல்மருவத்தூர் அருகே விபத்து - டீக்கடைக்காரர் பலி

    மேல்மருவத்தூர் அருகே விபத்தில் டீக்கடைக்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேல்மருவத்தூர்:

    மேல்மருவத்தூர் அடுத்து சோத்துப்பாக்கத்தில் இருந்து சித்தாமூருக்கு ஷேர் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 5 பேர் இருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி ஷேர் ஆட்டோ மீது உரசியது.

    இதில் நிலை தடுமாறி ஓடிய ஆட்டோ எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மதுரை என்பவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தறிகெட்டு ஓடிய ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததில் டிரைவர் மணிமாறன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான மதுரை மதுராந்தகத்தை அடுத்து அவுரிமேடு பகுதியை சேர்ந்தவர். டீக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    Next Story
    ×