search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடையும்: தங்க தமிழ்செல்வன்
    X

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடையும்: தங்க தமிழ்செல்வன்

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடையும் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். #ADMK #ThangaTamilselvan #BJP

    தேனி:

    தேனியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்து எங்களுக்கு அடிக்கடி அழைப்பு வருகிறது. எங்களுடன் வந்து இணைந்து பணியாற்றுமாறு அமைச்சர்கள் பேசி வருகின்றனர். உண்மையில் அ.தி.முக.வை விட அ.ம.மு.க.வுக்குத்தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் உள்ளது. எனவே அவர்கள்தான் எங்களுடன் வந்து இணைய வேண்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மாநில கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைக்கும். ஏனெனில் தேசிய கட்சிகளுக்கு மாநில நலனில் அக்கறை கிடையாது. மாநிலத்தின் உரிமைகளான முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, ஸ்டெர்லைட், நீட் தேர்வு, கச்சத்தீவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி அமைத்ததை நாங்கள் வரவேற்கிறோம். ஏனென்றால் இந்த 2 கட்சிகளையும் மக்கள் தூக்கி எறிவார்கள். தேர்தலில் இக்கூட்டணி படுதோல்வி அடைவது உறுதி.

    தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும். ஆனால் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThangaTamilselvan #BJP

    Next Story
    ×