என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவட்டார் அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
Byமாலை மலர்15 Feb 2019 11:59 AM GMT (Updated: 15 Feb 2019 11:59 AM GMT)
திருவட்டார் அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவட்டார்:
மார்த்தாண்டம் அருகே உள்ள மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் சுவாமிதாஸ். இவரது மகன் ஸ்டீபன் (வயது 26). வெல்டிங் தொழிலாளி.
இவர் நேற்று திருவட்டார் ஆற்றூர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல்மாடியில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கட்டித்தில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு பலத்த படுகாயம் ஏற்பட்டது. மூக்கு மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் பாய்ந்தது. ஸ்டீபன் கீழே தவறி விழுந்ததை பார்த்த மற்ற தொழிலாளர்கள் அங்கு ஓடி வந்தனர். படுகாயம் அடைந்த அவரை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஸ்டீபன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் சிவசங்கர், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருன்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X