search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வை பயமுறுத்தி பா.ஜ.க. கூட்டணி முயற்சி - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
    X

    அ.தி.மு.க.வை பயமுறுத்தி பா.ஜ.க. கூட்டணி முயற்சி - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

    அ.தி.மு.க.வை பயமுறுத்தி பா.ஜ.க. கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருவதாக திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். #Thirunavukkarasar #BJP

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளோடு விரைவில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட உள்ளது. எங்களுடைய கூட்டணி பலமாக உள்ளது.

    ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்காக வர உள்ளனர். காங்கிரஸ் கட் சியில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு இணைந்து தேர்தல் பணியாற்றுவோம்.

    நேரடியாக நடக்காத வி‌ஷயத்தை சரியாக தெரிந்து கொள்ளாமல் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை, பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    பா.ஜ.க.விற்கு கூட்டணி கட்சிகள் கிடைக்கவில்லை. இதனால் இருக்கின்ற கட்சிகளை விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை நிர்பந்தப்படுத்தி பயமுறுத்தி கூட்டணி பேச்சுவார்த்தையை தற்போது நடத்தி வருகின்றனர்.

    அ.தி.மு.க.விலேயே பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்கலாம் , வைக்கக்கூடாது என்று இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #BJP

    Next Story
    ×