என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே ஓடை மணல் கடத்தியவர் கைது
Byமாலை மலர்15 Feb 2019 8:37 AM GMT (Updated: 15 Feb 2019 8:37 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே ஓடை மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைகையாறு, மற்றும் நீர்நிலைகளில் இரவு பகல் பாராது 24 மணி நேரமும் மணல் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் குடிநீருக்காக அலைந்து திரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. ராஜதானி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் கொத்தப்பட்டி கண்மாய் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ஓடை மணல் கடத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக கொத்தப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த வேல்முருகன் (வயது26) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X