என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு
Byமாலை மலர்15 Feb 2019 8:26 AM GMT (Updated: 15 Feb 2019 8:26 AM GMT)
சேலம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் தாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). எலக்ட்ரீசியன். இவர் நேற்று இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இன்று காலை பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிள் முழுவதும் தீயில் எரிந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பல் தாதம்பட்டி குதியில் ஒரு ஆட்டோவை தீ வைத்து எரித்து விட்டார்கள். அப்போது அந்த இடத்தில் இருந்து சில அடி தூரம் தள்ளி எனது சகோதரியும், எனது மகனும் நின்று கொண்டிருந்தனர். அவர்களையும் மர்மகும்பல் தாக்கியது. இதை தட்டி கேட்டபோது எனக்கும், அந்த மர்மகும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் தான் எனது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்திருந்த வேண்டும். எனவே, அந்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் ராஜேந்திரன் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார், மர்மகும்பல் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X