search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூரில் தேமுதிக கொடிநாள் விழாவையொட்டி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம்
    X

    கரூரில் தேமுதிக கொடிநாள் விழாவையொட்டி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம்

    தே.மு.தி.க.வின் கொடி நாள் விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்களை மாவட்ட செயலாளர் வழங்கினார்.
    கரூர்:

    தே.மு.தி.க.வின் கொடி நாள் விழா கரூர் 1-வது வார்டு மற்றும் லைட் ஹவுஸ் கார்னரில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கு நகர செயலாளர் காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட தொழிற்சங்க துணை செயலாளர் எம்.ஆனந்த்    வரவேற்றார்.

    தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, நகர இளைஞரணி பிரநிதி பன்னீர், செயலாளர் ரவிக்குமார்,   நெசவாளர் அணி துணை செயலாளர் கன்னியப்பன், வார்டு நிர்வாகிகள் கிருஷ்ணன், சதீஷ், விக்னேஷ், பாலமுருகன், மகேஷ், சிவகுமார், லோகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் கே.வி.தங்கவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கரூர் 1-வது வார்டு மற்றும் லைட் ஹவுஸ் கார்னரில் கட்சி கொடியேற்றி பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

    இதில் கரூர் சட்டமன்ற பொறுப்பாளர் சோமூர் ரவி, பொருளாளர் அரிவின்ஸ், பொதுக்குழு உறுப்பினர் முருகன்  சுப்பையா, கேப்டன் மன்றம் ராஜா, சரவணன், தொழிற்சங்க துணை தலைவர் ஹரிஹரன், நகர நிர்வாகிகள் மகாமணி, பழனிவேல், ஆரியப்ப ராஜா, சிவகுமார், ராஜகுமரேசன், அண்ணாதுரை, மோகன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட தொழிற் சங்கதுணை செயலாளர் எம். ஆனந்த் செய்திருந்தார். #tamilnews
    Next Story
    ×