search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் - கொத்தனார் கைது
    X

    சேலத்தில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் - கொத்தனார் கைது

    சேலத்தில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் புதியதாக ஒரு வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த கட்டுமான பணியில் சேலம் இரும்பாலை அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரமேஷ் (வயது 25) என்பவர் ஈடுபட்டு வந்தார்.

    அப்போது ரமேஷ் பக்கத்து வீட்டில் வசித்து வரும் அந்த சிறுமியை பார்த்தார். அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.

    முதலில் சாதாரணமாக பேச தொடங்கிய அவர் பின்னர் ஆசைவார்த்தைகளை அள்ளி வீசினார். வேலைக்கு வரும்போ தெல்லாம் ரமேஷ் அந்த சிறுமியை தவறாமல் சந்தித்து பேசியதாக தெரிகிறது. இந்த பேச்சு நாளுக்கு நாள் அதிகமானது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி ரமேஷ், சிறுமியிடம் நான் உன்னை காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள் என்று கூறினார். அதற்கு அவர் மறுத்தார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த ரமேஷ், சிறுமியை மிரட்டியதாக தெரிகிறது.

    கடந்த 8-ந்தேதி வீட்டிற்கு சென்று அந்த சிறுமியை ரமேஷ் கடத்தி சென்று விட்டார். இது குறித்து பெற்றோர் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தார்.

    இதற்கிடையே ரமேஷ், சிறுமியை சித்தர் கோவிலுக்கு அழைத்துசென்று திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கேரளாவுக்கு அழைத்து சென்று சொகுசு விடுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதனை தொடர்ந்து ரமேஷ் தனது நண்பர் மாதேஷ் என்பவருடைய வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு வைத்தும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து 4 நாட்களாக வீட்டிற்குள் அடைத்து வைத்து செக்ஸ் சில்மி‌ஷம் செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மாதேஷ் வீட்டிற்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். ரமேசை பிடித்து டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டம், குழந்தைகள் தடுப்பு திருமணம் சட்டம் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சிறுமியை கடத்திச் சென்று கொத்தனார் 4 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கருங்கல்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×