search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி
    X

    வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி

    வேலை வாங்கித்தருவதாக பெண்ணிடம் ரூ.4.20 லட்சம் மோசடி செய்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மேலூர் நாவினிப்பட்டியைச் சேர்ந்த வெள்ளைக்கண் மகள் திருவரம்போற்றி (வயது 38). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சுந்தர் (வயது 42) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சுந்தர் கள்ளக்காதலி திருவரம் போற்றியிடம், “உனக்கு பெரிய நிறுவனத்தில் வேலை வாங்கித்தருகிறேன். இதற்கு ரூ.4.20 லட்சம் செலவாகும்“ என்று கேட்டுள்ளார்.

    இதற்கு சுந்தரின் தாய் பஞ்சவர்ணம், சகோதரிகள் ரேணுகா, ரேவதி, பேச்சியம்மாள் மற்றும் உறவினர் காட்டுராஜா மனைவி இந்திரா ஆகிய 5 பேரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

    சுந்தரின் பேச்சை நம்பிய திருவரம் போற்றி, அவரிடம் ரூ.4.20 லட்சம் ரொக்கத்தை கொடுத்துள்ளார். சுந்தர் கொடுத்த வாக்குறுதியின்படி வேலை வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பித்தர மறுத்து உள்ளார்.

    இது தொடர்பாக திருவரம்போற்றி மேலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜேசு வழக்குப்பதிவு செய்து 6 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    Next Story
    ×