search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈமச்சடங்கு நடத்த மாரடைப்பால் இறந்தவர்களுக்கு விரைவாக இறப்பு சான்றிதழ் - அமைச்சர் விஜயபாஸ்கர்
    X

    ஈமச்சடங்கு நடத்த மாரடைப்பால் இறந்தவர்களுக்கு விரைவாக இறப்பு சான்றிதழ் - அமைச்சர் விஜயபாஸ்கர்

    ஈமச்சடங்கு நடத்த மாரடைப்பால் இறந்தவர்களுக்கு விரைவாக இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ministervijayabaskar #deathcertificate

    சென்னை:

    சட்டசபையில் இன்று தோப்பு வெங்கடாசலம் (அ.தி.மு.க.), நேரு (தி.மு.க.) பேசும்போது, வீட்டில் மாரடைப்பால் உயிரிழப் போருக்கு இறப்பு சான்றிதழ் உடனடியாக கிடைக் காததால் பல்வேறு பிரச்சினை ஏற்படுகிறது. உடலை எரிப்பதற்கு கூட இடுகாட்டில் சான்றிதழ் கேட்பதால் சிக்கல் ஏற்படுகிறது. எனவே விரைவாக இறப்பு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அமைச்சர் விஜயபாஸ்கர்:- தற்போது பிறப்பு சான்றிதழ் ஆன்லைன் மூலமாக வழங்கப்படுகிறது. இதற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதுபோல் வீட்டில் இறப்பவர்கள் மாரடைப்பால் இறந்தால் சட்ட பிரச்சினைகள் வரும் என்பதால் தான் தாமதமாகிறது. அதற்கு நல்ல தீர்வு காணும் வகையில் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். #ministervijayabaskar #deathcertificate 

    Next Story
    ×