search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாடானை அருகே 6 மாதமாக குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதி
    X

    திருவாடானை அருகே 6 மாதமாக குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதி

    திருவாடானை அருகே ஆறுமாதமாக குடி தண்ணீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கல்லூர்பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமமான திருமடிமிதியூர் தொத்தார் கோட்டை காலனி குடியிருப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்பு பகுதிக்கென்று ஒருவருடத்திற்கு முன்பு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் குடி தண்ணீர் வரவே இல்லை.

    குடிநீர் தொட்டியை திறப்பதற்காக வந்த அதிகாரிகள் முன்பு 5, 6 குடங்கள் தண்ணீர் ஊற்றி குழாயை திறந்து வைப்பது போல் போட்டோ எடுத்து சென்றவர்கள் அதன் பிறகு தண்ணீர் வரவே இல்லை.

    அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது குறித்து கிராம மக்கள் கூறும் போது, இந்த கிராமத்திற்கு ஆறுமாதமாக தண்ணீர் கிடைக்கவில்லை. குடிநீர் குழாய் உடைந்துள்ளது.

    பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் இந்தப்பகுதி மக்களை புறக்கணிப்பதாகவே கருதுகிறோம். எனவே உடனடியாக குடி நீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×