search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் விவகாரத்தில் காங்கிரசார் பொய்யான குற்றச்சாட்டு - தமிழிசை
    X

    ரபேல் விவகாரத்தில் காங்கிரசார் பொய்யான குற்றச்சாட்டு - தமிழிசை

    ரபேல் விவகாரத்தில் காங்கிரசார் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #BJP #RafaleDeal

    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை ஈரோட்டுக்கு வருகிறார். மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் வேலூருக்கு வருகிறார். மத்திய மந்திரி ஸ்மிருதிராணி திருவண்ணாமலை வருகிறார். நிதின் கட்காரி நாளை மறுநாள் தமிழகம் வர உள்ளார்.

    மத்திய மந்திரிகள் தமிழகத்திற்கு தொண்டர்களை சந்திக்க வருகிறார்கள். அவர்கள் வருகை பாராளுமன்ற தேர்தலை நாங்கள் வெற்றிகரமாக சந்திக்க உதவியாக இருக்கும்.

    ரபேல் விவகாரத்தை வைத்துக்கொண்டு ராகுல் காந்தி மற்றும் காங்கிரசார் அரசியல் செய்து வருகிறார்கள். பா.ஜ.க. ஆட்சி நம்நாட்டிற்கு நல்ல திட்டங்களை கொடுத்து இருக்கிறது. ஊழலற்ற நிர்வாகத்தை அமைத்திருக்கிறது. அதனால்தான் ரபேல் தவிர எதிர்க்கட்சிகள் வேறு எந்த திட்டத்தை பற்றியும் பேச முடியவில்லை.

    ரபேல் விவகாரம் குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுத்து விட்டனர். ஆனாலும் 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் அதிகமாக ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தது. அப்படிப்பட்ட காங்கிரசார் இன்று பொய்யான ரபேல் விவகாரத்தை தூக்கி வைத்து பேசுகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறியிருந்தார். அவர் கூறியது சரியாகத்தான் இருக்கும். பா.ஜ.க. கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் சேரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP #RafaleDeal

    Next Story
    ×