search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அருகே வடமாநில வாலிபர் கொலை - போலீசார் விசாரணை
    X

    புதுவை அருகே வடமாநில வாலிபர் கொலை - போலீசார் விசாரணை

    புதுவை அருகே வடமாநில வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்னகோட்டக்குப்பத்தில் தனியார் கெஸ்ட் அவுஸ் உள்ளது. பல ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ள கெஸ்ட்அவுசில் நீச்சல்குளம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    அதற்காக வட மாநிலத்தை சேர்ந்த பலர் தொழிலாளர்களாக வேலைபார்த்து வருகின்றனர். அதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த விபின்சர்க்கார் (வயது 47) இவருடைய சித்தப்பா மகன் கெரன் பிஸ்வாஸ் (37) இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர்.

    இதில் கெரன் பிஸ்வாஸ்க்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கோபம் அடைந்த விபின்சர்க்கார் நாம் வேறு மாநிலத்தில் இருந்து வந்து வேலை செய்கிறோம். தினமும் மது குடிக்காமல் பணத்தை சேர்த்து வைத்து வீட்டுக்கு அனுப்புமாறு கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கெரன் பிஸ்வாஸ் விபின்சர்க்காரை சரமாரியாக தாக்கினார்.

    இதனால் ஆத்திரமடைந்த விபின்சர்க்கார் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து கெரன் பிஸ்வாஸ் முகம் மற்றும் பல இடங்களில் கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கெரன் பிஸ்வாஸ் துடிதுடித்து இறந்து போனார்.

    இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபின்சர்க்காரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×