search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் ஜெயிலில் தொடர் உண்ணாவிரதம்: நளினி-முருகன் பார்வையாளர்களை சந்திக்க தடை
    X

    வேலூர் ஜெயிலில் தொடர் உண்ணாவிரதம்: நளினி-முருகன் பார்வையாளர்களை சந்திக்க தடை

    வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதால் பார்வையாளர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Nalini #Murugan
    வேலூர்:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் 28 ஆண்டுகளாக ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

    விடுதலை செய்யக்கோரி முருகன் இன்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நளினி 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இருவரும் இன்று காலை உணவை சாப்பிட மறுத்து விட்டனர்.

    ஜெயில் அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர் உண்ணாவிரதத்தால் நளினியின் உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் குழுவினர் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    சிறை விதிகளின்படி கைதி உணவு உண்ணாமல் இருத்தல் கூடாது. அவ்வாறு உண்ணாமல் இருந்தால் அவர்களுக்கான சிறை சலுகைகள் ரத்து செய்யப்படும். அதன்படி முருகன், நளினி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவர்களுக்கான சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் இனி தனது வக்கீலை தவிர பிற பார்வையாளர்கள் உறவினர்களை சந்திக்க முடியாது. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    15 நாட்களுக்கு ஒருமுறை நளினி- முருகன் சந்தித்து பேசுவதையும் ரத்து செய்வது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

    ஜெயிலில் உள்ள அங்கன்வாடியில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை 2 பேரும் வாங்க மறுத்து விட்டனர்.   #Nalini #Murugan

    Next Story
    ×