search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்குறிச்சி அருகே பாம்பு கடித்து பெண் பலி
    X

    கள்ளக்குறிச்சி அருகே பாம்பு கடித்து பெண் பலி

    கள்ளக்குறிச்சி அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள விளாம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 65). விவசாயி. இவரது மனைவி பூபதி (60). இவர்கள் அங்குள்ள காட்டுக்கொட்டகையில் வசித்து வந்தனர்.

    நேற்று மாலை பூபதி வயல்வெளிக்கு சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது. மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை பூபதி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×