search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் நிகழ்ச்சியில் தேசிய கீதம் பாடப்படாததற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
    X

    பிரதமர் நிகழ்ச்சியில் தேசிய கீதம் பாடப்படாததற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

    தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடப்படாததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #PMModi #NationalAnthem
    சென்னை:

    தமிழகத்தில் மதுரை மற்றும் திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி வேம்பு என்பவர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.



    அவர் தனது மனுவில், பிரதமர் பங்கேற்ற இரண்டு அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடப்படாதது குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது பிரதமர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். #PMModi #NationalAnthem
    Next Story
    ×