search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் அஞ்சல் துறை பெண் அதிகாரி தற்கொலை
    X

    ஜெயங்கொண்டத்தில் அஞ்சல் துறை பெண் அதிகாரி தற்கொலை

    ஜெயங்கொண்டத்தில் குடும்ப தகராறில் அஞ்சல் துறை பெண் அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த வாரியங்காவல் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 35). இவர்களுக்கு கார்த்திக்கேயன் (3) என்ற மகன் உள்ளார்.

    விஜயலட்சுமி வாரியங்காவல் அஞ்சல் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கருணாகரனுக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே குடும்பதகராறு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த விஜயலட்சுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×