search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
    X

    போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

    போச்சம்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவியை அடுத்த வேடர்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சீனன் (வயது62). இவரது மனைவி சாவித்ரி (57). இவர்களுக்கு 2 மகள்களும், 4 மகன்களும் உள்ளனர்.

    போச்சம்பள்ளியை அடுத்த வேடர்பட்டபசுல் கிராமத்தில் சீனன் தனது மகள்களை திருமணம் செய்து கொடுத்துள்ளார். அதனால் மகள்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் சீனன் சென்றார். அப்போது அங்குள்ள ரேசன் கடையின் முன்பு நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. 

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×