search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்கலை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5¼ பவுன் நகை திருட்டு
    X

    தக்கலை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5¼ பவுன் நகை திருட்டு

    தக்கலை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5¼ பவுன் தாலி செயினை திருடிய மர்ம நபர் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    தக்கலையை அடுத்த வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண பிள்ளை. இவரது மனைவி ராதா (வயது 63).

    ராதா தக்கலை செல்வதற்காக பஸ் ஏற வில்லுக்குறி பஸ் நிறுத்தத்திற்கு சென்றார். அங்கிருந்து மார்த்தாண்டம் செல்லும் பஸ்சில் ஏறினார்.

    தக்கலை பஸ் நிலையம் வந்ததும், பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது ராதா அணிந்திருந்த 5¼ பவுன் தாலி செயினை காணவில்லை.

    அதிர்ச்சி அடைந்த ராதா, இது பற்றி கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறி அழுதார். அவர்கள் சம்பவம் பற்றி தக்கலை போலீசில் புகார் செய்தனர். அதில் ஓடும் பஸ்சில் யாரோ மர்ம நபர்கள் ராதாவின் நகையை திருடிவிட்டதாகவும், அவர்களை கண்டுபிடித்து நகையை மீட்டு தரவேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்.

    இதுபோல செங்கோடி பகுதியை சேர்ந்த கங்காதரன் தம்பியின் மனைவி சுலோச்சனாம்மா (68) என்பவர் மண்டைக்காடு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.

    அங்கு தரிசனம் முடிந்து திரும்பிய போது சுலோச்சனாம்மா அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×