search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெம்பாக்கம் அருகே டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    வெம்பாக்கம் அருகே டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை

    வெம்பாக்கம் அருகே தாய் கண்டித்ததால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தூசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அருகே உள்ள மாத்தூரை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகன் சதீஷ் (வயது 23). ஜே.சி.பி. டிரைவர். இவர் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு தராமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து செலவு செய்து வந்துள்ளார்.

    இதனை அவரது தாயார் பொன்னி நேற்று தட்டி கேட்டுள்ளார் இதனால் மனமுடைந்த சதீஷ் வாழவந்தல் கிராமத்திற்கு சென்று அங்கு உள்ள செங்கல் சூளையில் வி‌ஷம் குடித்து மயக்க நிலையில் கிடந்தார். இதனை கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சதீஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து தூசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×