search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
    X

    ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

    ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. #JayaDeathProbe #ArumugasamyCommission
    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை மனு தாக்கல் செய்தது.



    அந்த மனுவில், ஜெயல‌லிதா சிகிச்சை குறித்து விசாரிக்க நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்கள் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், இந்த வழக்கில் தீர்வு காணும் வரை மருத்துவ விவகாரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கில் ச‌சிகலாவும் எதிர் மனுதார‌ராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மனு, நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ண‌ன் ராமசாமி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால், விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். #JayaDeathProbe #ArumugasamyCommission
    Next Story
    ×