என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாராளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் - குஷ்பு
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மாற்று கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு பெருகி வரும் ஆதரவை கண்டு பிரதமர் மோடி பயந்து போய் உள்ளார். ‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கிறது. மோடியின் கையாட்டி பொம்மையாக இங்குள்ள அ.தி.மு.க. அரசு உள்ளது.
5 ஆண்டுகளாக மோடி தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தரவில்லை என்கிறார்கள். அப்படியிருக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஏன் மோடியை ஆதரிக்கிறீர்கள்?. தமிழக அரசின் கடன் தொகை ரூ.4 லட்சம் கோடியாக எப்படி உயர்ந்தது?. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நடிகர் கமலின் ‘மக்கள் நீதி மய்யம்’ எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று நாங்கள் அழைக்கவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வரலாம். கமல் வருவது அவரது விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார். #Parliamentelection #DMK #Congress #Kushboo
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்