search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே மனைவி-குழந்தைகள் இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை
    X

    ஆண்டிப்பட்டி அருகே மனைவி-குழந்தைகள் இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை

    ஆண்டிப்பட்டி அருகே மனைவி குழந்தைகள் இறந்த துக்கத்தில் விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள பால்பண்ணை தெரு தர்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜூ. (வயது 31). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தைகள் இறந்து விட்டனர். இதனால் ராஜூ கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் சோகத்தில் இருந்து வந்துள்ளார்.

    மேலும் ராஜூவின் மனைவி ராமபிரியா மற்றும் குழந்தைகள் இறந்தது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ராஜூவின் பெற்றோர் உள்பட 3 பேர் மீது விசாரணை நடந்து வருகிறது.

    இதனால் ராஜூ மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜூவின் தந்தை முருகன் அளித்த புகாரின் பேரில் கடமலைக்குண்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×