என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒட்டப்பட்டி அருகே ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை, ரூ.12 ஆயிரம் கொள்ளை
Byமாலை மலர்9 Feb 2019 10:34 AM GMT (Updated: 9 Feb 2019 10:34 AM GMT)
ஒட்டப்பட்டி அருகே பூட்டிய வீட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் ரூ.12ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியில் உள்ள சத்யா நகர் அப்துல்கலாம் தெருவைச் சேர்ந்தவர் தனபால்.
இவர் செக்காரப்பட்டி உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி. இவர் பங்குநத்தம் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இருவரும் ஆசிரியர் என்பதால் நேற்ற காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றுவிட்டனர்.
பின்னர் மாலையில் மீண்டும் 2 பேரும் வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது அஙகு பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
அதே பீரோவில் மற்றொரு கவரில் 5 பவுன் நகையை செல்வி சுருட்டி வைத்து இருந்தார். அதனை மர்ம நபர்கள் கவரிங் என்று நினைத்து விட்டு சென்றிருக்கலாம் என்று தெரியவந்தது. கவரில் சுருட்டி வைத்திருந்தால் 5 பவுன் நகை மட்டும் தப்பியது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அதியமான் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் உடனே அங்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
பூட்டிய வீட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியில் உள்ள சத்யா நகர் அப்துல்கலாம் தெருவைச் சேர்ந்தவர் தனபால்.
இவர் செக்காரப்பட்டி உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி. இவர் பங்குநத்தம் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இருவரும் ஆசிரியர் என்பதால் நேற்ற காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றுவிட்டனர்.
பின்னர் மாலையில் மீண்டும் 2 பேரும் வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது அஙகு பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
அதே பீரோவில் மற்றொரு கவரில் 5 பவுன் நகையை செல்வி சுருட்டி வைத்து இருந்தார். அதனை மர்ம நபர்கள் கவரிங் என்று நினைத்து விட்டு சென்றிருக்கலாம் என்று தெரியவந்தது. கவரில் சுருட்டி வைத்திருந்தால் 5 பவுன் நகை மட்டும் தப்பியது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அதியமான் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் உடனே அங்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
பூட்டிய வீட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X