search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை நடிகை கொலையில் டைரக்டர் பாலகிருஷ்ணனுக்கு உதவியவர்கள் யார்? - போலீஸ் தீவிர விசாரணை
    X

    துணை நடிகை கொலையில் டைரக்டர் பாலகிருஷ்ணனுக்கு உதவியவர்கள் யார்? - போலீஸ் தீவிர விசாரணை

    துணை நடிகை கொலையில் டைரக்டர் பாலகிருஷ்ணனுக்கு உதவியவர்கள் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #Sandhya #Balakrishnan
    சென்னை:

    சென்னையில் கொடூரமாக கொல்லப்பட்டு துண்டு துண்டாக வீசப்பட்ட துணை நடிகை கொலை சம்பவத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் அவரது கணவரும், டைரக்டருமான பாலகிருஷ்ணனே கொலை செய்து உடலை துண்டு துண்டாக்கி வீசியது தெரிய வந்தது.

    பாலகிருஷ்ணனின் நடத்தைகள் அவர் மனநிலை பாதிக்கப்பட்டது போல தெரிந்தாலும் கொலை செய்யப்பட்ட உடலை அப்புறப்படுத்த அவருக்கு யாரும் உதவினார்களா? என்ற கோணத்தில் விசாரணை செல்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    விசாரணையில் சந்தியாவின் நடத்தை மற்றும் பின்புலம் பற்றி சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

    தூத்துக்குடியில் சந்தியா இருந்தபோது அவருக்கு நண்பர்களாக இருந்தவர்கள் பட்டியலை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அந்த பட்டியலில் அரசியல் புள்ளிகள், காவல்துறை அதிகாரிகள் கூட இருக்கிறார்கள்.

    சந்தியாவின் முன்னாள் நண்பரான மெக்கானிக் கடைகாரர் ஒருவர் மீது சந்தியாவே புகார் கொடுத்த வழக்கு ஒன்று உள்ளது. அந்த நபரிடமும் விசாரித்துள்ளோம்.

    பாலகிருஷ்ணன் சந்தியாவை கொலை செய்த அன்று இரவு சந்தியா உடலுடன் வீட்டிலேயே தங்கி உள்ளார். விடியற்காலையில் தான் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.

    இந்த இடைபட்ட நேரத்தில் பாலகிருஷ்ணன் தனது நண்பர்கள் சிலரிடம் மொபைலில் பேசியுள்ளார். அவரது மொபைல் எண் மூலம் இந்த பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

    சந்தியாவின் தலை, இடுப்புக்கு மேல் உள்ள பகுதிகளை பெருங்குடி குப்பை கிடங்கில் 3வது நாளாக இன்றும் 6 ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு துப்பரவுப் பணியாளர்களுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

    சந்தியாவின் தலை எங்களுக்கு பெரிய பிரச்சினையாகி உள்ளது. டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ள குப்பையில் இருந்து சந்தியாவின் தலையை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே இந்த பணி இன்னும் சில நாட்கள் நீடிக்கலாம். தலை மற்றும் இதர உடல் பாகங்கள் கிடைத்த பிறகுதான் இந்த வழக்கு விசாரணை இறுதிகட்டத்தை எட்டும்’.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Sandhya #Balakrishnan

    Next Story
    ×