என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பதவி பறிபோனது வருத்தமாக இருந்தது: திருநாவுக்கரசர்
Byமாலை மலர்9 Feb 2019 2:24 AM GMT (Updated: 9 Feb 2019 2:24 AM GMT)
முன்னாள் தலைவர் என்ற முறையில் மகிழ்ச்சியோடும், பெருமையோடும் கே.எஸ்.அழகிரியிடம் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறேன். ஆனால் தன்னுடைய பதவி பறிபோன போது வருத்தமாக இருந்ததாக திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Congress
சென்னை :
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்கும் நிகழ்ச்சி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-
முன்னாள் தலைவர் என்ற முறையில் மகிழ்ச்சியோடும், பெருமையோடும் கே.எஸ்.அழகிரியிடம் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறேன்.
புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.எஸ்.அழகிரியுடன் இணைந்து செயல்படுவோம். ராகுல்காந்தியை பிரதமராக நாற்காலியில் உட்கார வைப்போம். அடுத்ததாக தமிழகத்தில் இருக்கும் ஊழல் கட்சியை அகற்ற வேண்டும். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்-அமைச்சராக வர வேண்டும்.
கே.எஸ்.அழகிரிக்கு என்னுடைய பரிபூரண ஒத்துழைப்பு எப்போதும் உண்டு. என்னுடைய பதவி பறிபோன போது வருத்தமாக தான் இருந்தது. ஆனால் தலைவர் ராகுல்காந்தியை நேரில் பார்த்த போது அந்த வருத்தம் காணாமல் போய்விட்டது. தற்போது தேர்தல் பிரசார குழுவில் இருக்கிறேன். விரைவில் தேர்தல் களத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார். #Thirunavukkarasar #Congress
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்கும் நிகழ்ச்சி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-
முன்னாள் தலைவர் என்ற முறையில் மகிழ்ச்சியோடும், பெருமையோடும் கே.எஸ்.அழகிரியிடம் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறேன்.
புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.எஸ்.அழகிரியுடன் இணைந்து செயல்படுவோம். ராகுல்காந்தியை பிரதமராக நாற்காலியில் உட்கார வைப்போம். அடுத்ததாக தமிழகத்தில் இருக்கும் ஊழல் கட்சியை அகற்ற வேண்டும். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்-அமைச்சராக வர வேண்டும்.
கே.எஸ்.அழகிரிக்கு என்னுடைய பரிபூரண ஒத்துழைப்பு எப்போதும் உண்டு. என்னுடைய பதவி பறிபோன போது வருத்தமாக தான் இருந்தது. ஆனால் தலைவர் ராகுல்காந்தியை நேரில் பார்த்த போது அந்த வருத்தம் காணாமல் போய்விட்டது. தற்போது தேர்தல் பிரசார குழுவில் இருக்கிறேன். விரைவில் தேர்தல் களத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார். #Thirunavukkarasar #Congress
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X