search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் - அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி
    X

    பாராளுமன்ற தேர்தல் - அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார். #Elections2019
    சென்னை:

    பா.ஜ.க. தலைமையில் ஆட்சி செய்து வரும் மத்திய அரசின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே, மே மாதம் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் காவல் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளை மாற்றம் செய்ய வேண்டும்.

    காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை இடமாற்றம் செய்து பிப்ரவ்ரி 15-ம் தேதிக்குள் அறிக்கை தரவேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார். மேலும், ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை தரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. #Elections2019
    Next Story
    ×