search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வள்ளியூர் அருகே 2 மகன்களுடன் தாய் மாயம்
    X

    வள்ளியூர் அருகே 2 மகன்களுடன் தாய் மாயம்

    வள்ளியூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 மகன்களுடன் தாய் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை:

    ஏர்வாடியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 33). இவர்களுக்கு வரதன் (8), வாசன் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் மனம் உடைந்த முருகேஸ்வரி 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு ஏர்வாடியில் உள்ள தந்தை வீட்டருகே தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். அவரது மகன்களும் அந்தப் பகுதியில் உள்ள பள்ளிகூடத்தில் 3-ம் வகுப்பு மற்றும் 1-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முருகேஸ்வரியையும் அவரது 2 மகன்களையும் காணவில்லை. கணவர் செல்வம் வீட்டுக்கோ, உறவினர் வீட்டுக்கோ செல்லவில்லை. அவரது செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது. அவரைப்பற்றிய விபரங்கள் தெரியாததால், சித்தப்பா கண்ணன் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஸ்வரியையும், 2 மகன்களையும் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×