என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வள்ளியூர் அருகே 2 மகன்களுடன் தாய் மாயம்
நெல்லை:
ஏர்வாடியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 33). இவர்களுக்கு வரதன் (8), வாசன் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனம் உடைந்த முருகேஸ்வரி 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு ஏர்வாடியில் உள்ள தந்தை வீட்டருகே தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். அவரது மகன்களும் அந்தப் பகுதியில் உள்ள பள்ளிகூடத்தில் 3-ம் வகுப்பு மற்றும் 1-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முருகேஸ்வரியையும் அவரது 2 மகன்களையும் காணவில்லை. கணவர் செல்வம் வீட்டுக்கோ, உறவினர் வீட்டுக்கோ செல்லவில்லை. அவரது செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது. அவரைப்பற்றிய விபரங்கள் தெரியாததால், சித்தப்பா கண்ணன் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஸ்வரியையும், 2 மகன்களையும் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்