search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூலனூரில் தொழிலாளி விபத்தில் பலி
    X

    மூலனூரில் தொழிலாளி விபத்தில் பலி

    மூலனூரில் தொழிலாளி விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி விசாரணை நடத்தி வருகின்றார்.
    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஈஸ்வரன்கோவில் வீதியை சேர்ந்த தண்டபானி என்பவரின் மகன் பாலசுப்பிரமணியன்(38) இவர் மூலனூரில் இரும்பு பட்டறையில்வேலை பார்த்து வந்தார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், சக்திவேதாஷ்(7)என்ற மகனும், சக்திஷ்னா(3), சக்திஸ்ரீ(2) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணியன் தனது மோட்டார் சைக்கிளில் மூலனூர்-அக்கரைப்பாளையம் சாலையில் மூலனூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். இவருக்கு முன்னால் ஒரு லாரி சென்றுகொண்டு இருந்தது வஞ்சிவலசு பிரிவு அருகே வந்த போது முன்னால் சென்ற லாரி வளைவில் திடீர் என நின்றதால் பின்னால் வந்த பாலசுப்பிரமணியன் நிலை தடுமாறி லாரியின் பின்பக்கத்தில் பலமாக மோதியதில் பாலசுப்பிரமணியனில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

     தகவல் அறிந்த மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    Next Story
    ×