search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் பனியன் நிறுவனத்தில் திருடிய டெல்லி வாலிபர் கைது
    X

    திருப்பூர் பனியன் நிறுவனத்தில் திருடிய டெல்லி வாலிபர் கைது

    திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணத்தை திருடிய டெல்லி வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையம் புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 34). இவர் அனுப்பர்பாளையத்தை அடுத்த திலகர் நகரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பனியன் நிறுவனத்தில் இருந்த ரூ.18 ஆயிரத்து 800 திருட்டு போனது. 

    இதுகுறித்து பிரான்சிஸ் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி பார்வையிட்டனர். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த டெல்லி தில்சாத் காலனியை சேர்ந்த மயாங்காபூர் (21) என்பவர் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. 

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×