search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
    X

    மார்த்தாண்டம் அருகே திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

    மார்த்தாண்டம் அருகே திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    திண்டுக்கல் மாவட்டம் மஞ்சநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி திவ்யா(வயது19). இவர்களுக்கு 4 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.

    தற்போது அவர்கள் மார்த்தாண்டத்தை அடுத்த வெட்டுமணி நல்லூரில் வசித்து வந்தனர். திவ்யாவுக்கு திடீரென உடல்நலம் குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருந்தாலும் அவருக்கு நோய் குணமாகவில்லை. சம்பவத்தன்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மன வருத்தத்துடன் காணப்பட்டார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திவ்யா மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி அழுதனர்.

    மேலும் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், டி.எஸ்.பி. கார்திகேயன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    அங்கு பிணமாக கிடந்த திவ்யாவின் உடலை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 4 மாதத்தில் திவ்யா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளது.

    மார்த்தாண்டம் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருங்கல்லையடுத்த மாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட்(வயது38). இவர் நேற்று வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×