என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு - பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம்
Byமாலை மலர்7 Feb 2019 10:45 AM GMT (Updated: 7 Feb 2019 10:45 AM GMT)
தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்தை கண்டித்து கார்கோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட 46 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் கார்கோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன் என்பவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, தலைமை ஆசிரியர் அன்பழகனை, வேடந்தவாடி அரசு தொடக்கப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது.
பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள், தங்களது தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த மாணவர்களின் பெற்றோரும் பள்ளியில் அங்கு திரண்டனர். தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிக்கு பூட்டு போட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலர் அருட் செல்வன், உதவி தொடக்க கல்வி அலுவலர் தேன்மொழி ஆகியோர் பள்ளிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.
அப்போது மாணவ, மாணவிகள் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று கண்ணீர்விட்டு அழுதனர்.
தலைமை ஆசிரியர் அன்பழகன் தனது சொந்த செலவில் பள்ளிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளார்.
அவர் வந்த பிறகுதான் பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. எனவே அவரை மீண்டும் இந்த பள்ளியிலேயே பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் தர்ணாவை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர்.
வாணாபுரம் அருகே காட்டாம்பூண்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு உடற்கல்வி ஆசிரியராக சிவப்பிரகாசம் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவப்பிரகாசம் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பெரியகுளத்துக்கு மாற்றப்பட்டார்.
இதனை கண்டித்தும் சிவப்பிரகாசத்தை இதே பள்ளியில் மீண்டும் உடற்கல்வி ஆசிரியராக பணியமர்த்தக் கோரி மாணவ-மாணவிகள் பள்ளியின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தச்சம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கை குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக கூறினர். இதில் மாணவ, மாணவிகள் சமாதானம் அடைந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகள் கலைந்து வகுப்பிற்கு சென்றனர். #tamilnews
ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட 46 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் கார்கோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன் என்பவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, தலைமை ஆசிரியர் அன்பழகனை, வேடந்தவாடி அரசு தொடக்கப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது.
பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள், தங்களது தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த மாணவர்களின் பெற்றோரும் பள்ளியில் அங்கு திரண்டனர். தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிக்கு பூட்டு போட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலர் அருட் செல்வன், உதவி தொடக்க கல்வி அலுவலர் தேன்மொழி ஆகியோர் பள்ளிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.
அப்போது மாணவ, மாணவிகள் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று கண்ணீர்விட்டு அழுதனர்.
தலைமை ஆசிரியர் அன்பழகன் தனது சொந்த செலவில் பள்ளிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளார்.
அவர் வந்த பிறகுதான் பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. எனவே அவரை மீண்டும் இந்த பள்ளியிலேயே பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் தர்ணாவை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர்.
வாணாபுரம் அருகே காட்டாம்பூண்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு உடற்கல்வி ஆசிரியராக சிவப்பிரகாசம் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவப்பிரகாசம் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பெரியகுளத்துக்கு மாற்றப்பட்டார்.
இதனை கண்டித்தும் சிவப்பிரகாசத்தை இதே பள்ளியில் மீண்டும் உடற்கல்வி ஆசிரியராக பணியமர்த்தக் கோரி மாணவ-மாணவிகள் பள்ளியின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தச்சம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கை குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக கூறினர். இதில் மாணவ, மாணவிகள் சமாதானம் அடைந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகள் கலைந்து வகுப்பிற்கு சென்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X