என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடன்குடியில் டிராவல்ஸ் அதிபர் வீட்டை உடைத்து நகை கொள்ளை
Byமாலை மலர்7 Feb 2019 10:11 AM GMT (Updated: 7 Feb 2019 10:11 AM GMT)
உடன்குடியில் டிராவல்ஸ் அதிபர் வீட்டை உடைத்து நகையை கொள்ளையடித்த கொள்ளையன் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடன்குடி:
உடன்குடி சுல்தான்புரத்தை சேர்ந்தவர் பதூருதீன் (வயது 60). இவர் சென்னை மண்ணடியில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இதற்காக குடும்பத்தினருடன் அங்கு தங்கியுள்ளார். மாதம் ஒரு முறை மட்டும் உடன்குடிக்கு வந்து செல்வார். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டு மாடி பகுதி கதவை உடைத்து மர்ம நபர் உள்ளே புகுந்துள்ளான்.
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகையை கொள்ளையடித்துள்ளான். அப்போது நள்ளிரவில் ஆள் இல்லாத வீட்டில் லைட் எரிவதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஒரு கொள்ளையன் பொருட்களை திருடி கொண்டிருப்பதை பார்த்து சத்தம் போட்டனர். பின்னர் அவனை பிடிக்க விரட்டி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையன் சுவர் ஏறி குறித்து அங்கிருந்து தப்பினான். அப்போது அவனது செருப்புகளை விட்டு சென்றான்.
இது குறித்து பதூருதீன் சகோதரர் மகன் முகமது புகாரி என்பவர் குலசேகரன்பட்டிணம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடன்குடி சுல்தான்புரத்தை சேர்ந்தவர் பதூருதீன் (வயது 60). இவர் சென்னை மண்ணடியில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இதற்காக குடும்பத்தினருடன் அங்கு தங்கியுள்ளார். மாதம் ஒரு முறை மட்டும் உடன்குடிக்கு வந்து செல்வார். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டு மாடி பகுதி கதவை உடைத்து மர்ம நபர் உள்ளே புகுந்துள்ளான்.
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகையை கொள்ளையடித்துள்ளான். அப்போது நள்ளிரவில் ஆள் இல்லாத வீட்டில் லைட் எரிவதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஒரு கொள்ளையன் பொருட்களை திருடி கொண்டிருப்பதை பார்த்து சத்தம் போட்டனர். பின்னர் அவனை பிடிக்க விரட்டி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையன் சுவர் ஏறி குறித்து அங்கிருந்து தப்பினான். அப்போது அவனது செருப்புகளை விட்டு சென்றான்.
இது குறித்து பதூருதீன் சகோதரர் மகன் முகமது புகாரி என்பவர் குலசேகரன்பட்டிணம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X