search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை மாவட்டத்தில் தொழில் பூங்கா மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் வேலுமணி
    X

    கோவை மாவட்டத்தில் தொழில் பூங்கா மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் வேலுமணி

    கோவை மாவட்டத்தில் 400 ஏக்கரில் உருவாக உள்ள தொழில் பூங்கா மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். #SPVelumani
    கோவை:

    நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் திறப்பு விழாவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது-

    தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக நாட்டின் முதுகெலும்பாக உள்ள வேளாண்மை துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

    நாராயணசாமி நாயுடுவுக்கு அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அவரது வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என 14.6.2017-ம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்தது.

    இதற்காக 20.1.2018-ல் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த அரசின் முதல்வர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் தானே முதல்-அமைச்சராக உள்ளார் என இந்த ஆட்சியை 10 நாளில், ஒரு மாதத்தில் கலைத்து விடுவோம் என எதிர்கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் கூறியது. ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கான்கிரீட் போட்டு ஸ்டிராங்காக உட்கார்ந்து உள்ளார். இந்த ஆட்சியை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. விவசாயிகள் உள்பட அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் தலா ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

    கோவையில் 400 ஏக்கரில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சமீபத்தில் நடைபெற்ற 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 3 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. இதுவரை பதவியில் இருந்தவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

    இந்த அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 50 ஆண்டு இல்லாத அளவுக்கு கோவை மாவட்டம் வளர்ச்சி அடைந்துள்ளது. 70 ஆண்டு கனவான அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை நமது முதல்-அமைச்சர் நிறைவேற்றி உள்ளார்.

    கோவை அரசு ஆஸ்பத்திரி தனியார் ஆஸ்பத்திரிக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. காந்திபுரம் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் 80 சதவீத விபத்து குறைந்துள்ளது. திருச்சி சாலை, அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. அவினாசி சாலை மேம்பாலம் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைய உள்ளது. தாய்லாந்து, பெங்களூருவில் உள்ளது போல் இந்த மேம்பாலம் அமையும். இந்த ஆட்சியில் அனைத்து மக்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார். #SPVelumani
    Next Story
    ×