search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி அருகே விபத்து - ஆட்டோ டிரைவர் பலி
    X

    பொள்ளாச்சி அருகே விபத்து - ஆட்டோ டிரைவர் பலி

    பொள்ளாச்சி அருகே விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள கிட்டி மல்லன் புதூர் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. கூலி தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று மாலை வி‌ஷம் குடித்து விட்டார்.

    அவர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். திருமூர்த்தியை பார்ப்பதற்காக அவரது உறவினர்கள் அம்பராம் பாளையத்தை சேர்ந்த சுப்பு லட்சுமி (50), பேச்சியம்மாள் (40), கஞ்சிமலை (60), மாசாணி (55), அம்மாசை (50), சக்திவேல் (27), பிரேம் குமார் (24) ஆகியோர் ஒரு ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆட்டோவை கனகராஜ் ஓட்டி வந்தார். இந்த ஆட்டோ நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பொள்ளாச்சி திருவள்ளூவர் திடல் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது கேரளா நோக்கி சென்ற வேன் ஆட்டோ மீது மோதியது.

    இதில் ஆட்டோ டிரைவர் கனகராஜ் மற்றும் அதில் பயணம் செய்த 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பலத்த காயம் அடைந்த டிரைவர் கனகராஜ், பேச்சியம்மாள், கஞ்சிமலை, மாசாணி ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஆனால் வழியிலே டிரைவர் கனகராஜ் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×